ஒரே நாளில் கொரோணாவால் யாழில் 10 பேர் மரணம்….!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 02 பேர், நல்லூரில் 02 பேர், சண்டிலிப்பாயில் ஒருவர், உடுவிலில் ஒருவர், தெல்லிப்பழையில் ஒருவர், கோப்பாயில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றுக் காலை தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கும் அன்டிஜன் பரிசோதனை ஊடாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews