சிறுவனை மோதித் தள்ளிவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள்…!

வீதியின் குறுக்கே சென்ற சிறுவனை, அந்த வழியில் வேக மாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் ஏ -9 வீதி நாவற்குழி ஐந்து வீட்டுச்சந்தியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெற் றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுவனை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews