தென்மராட்சி கிரிக்கெட் லீக் நடத்துகின்ற தென்மராட்சி கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்…!

தென்மராட்சி கிரிக்கெட் லீக் நடத்துகின்ற தென்மராட்சி கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆரம்பமாகியது.
தென்மராட்சியின் விளையாட்டுக் கழகங்களில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக தென்மராட்சி கிரிக்கெட் லீக்கினால் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தென்மராட்சி கிரிக்கெட் லீக்கின் தலைவர் ம.தர்சன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் உறுப்பினர்களான ஞா.கிஷோர், திருக்குமரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.
13 அணிகள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.
  

Recommended For You

About the Author: Editor Elukainews