சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார பிரிவைச் சேர்ந்த 9 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள், பராமரிப்பாளர்கள் அதிகமாக உள்ளனர்.

சுகாதாரத் துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மரணிப்பவர்களது ஊதியத்தை, அவர்களது சேவை காலம் முடியும் வரை அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச தாதியர்கள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews