முத்தமிழ் கல்விக்கழக மாணவர்களின் மகளிர்தின நிகழ்வு

நேற்றையதினம் (08.03.2023) முத்தமிழ் கல்விக்கழகத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வானது முத்தமிழ் கலையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மகளிரின் பெருமை பற்றிய கருத்துரை மற்றும் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கல்விக்கழக செயற்பாட்டாளர் செல்வி லக்சனா தலைமையில் இந்நிகழ்வில் மகளிர்கள், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரன், முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் வீ.சிவகுமார், சமூக செயற்பாட்டாளர் இ.சுபாஸ்கரன், முத்தமிழ் சனசமூக நிலைய செயலாளர் மா.நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews