மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மரக்கொப்பு பிரதான அதிஉயர் மின்கம்பியில் விழுந்ததன் மூலம் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews