யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (03.03.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி தேர்தலை உடன் நிறுத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின் போது எழுப்பினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews