ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் முன்பாக வாள்வெட்டு குழு தாக்குதல்! ஒருவர் படுகாயம், யாழ்.மருதனார் மடத்தில் பதற்றம்.. |

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews