யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 100 வயதான முதியவர் உட்பட வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தில் வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி சங்கானையை சேர்ந்த 64 வயதான பெண், தென்மராட்சியை சேர்ந்த 97 வயதான ஆண், சங்கானையை சேர்ந்த 46 வயதான பெண்,

வல்வெட்டித்துறையை சேர்ந்த 100 வயதான ஆண், அல்வாயை சேர்ந்த 49 வயதான பெண் ஆகியோரும் வீடுகளில் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக

சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews