இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 6 வது தொடர் கருத்தரங்கு நாளை…….!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும்  தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம் பெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம் பெறும் இவ் அமர்வில்
அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையார் சி.திருச்செந்தூரன் இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் யாப்புக்கான தேவைப்பாடுகள்’ எனும் தலைப்பில் உரையாட உள்ளார். இதில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews