நள்ளிரவில் வீசிய சுழல் காற்றால் பல இலட்சம் சொத்து இழப்பு….!

நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் பருத்தித்துறை தும்பளை பகுதியில்  இடம் பெற்றுள்ளது.
நேற்று பிற்பகலிலிருந்து கனமழை பெய்துவந்த நிலையில் நள்ளிரவு வேளை குறித்த சுழல் காற்று குறித்த மரத்தளபாட தொழிற்சாலை சூழலில் வீசியமையால் கட்டிடத்தின் கூரை தகடுகள் சேதமடைந்தமையாலும் காற்றினால் தூக்கி  வீசப்பட்டமையாலிம் மழை நீரில்  இயந்திரங்கள் நனைந்து பெறுமதி வாய்ந்த மரத்தளபாட உற்பத்தி இயந்திரங்கள், கணனிகள், நிழல்பட பிரதி உயந்திரங்கள், மின் இணைப்பு சாதனங்கள், உட்பட சுமார் எண்பது இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன்.

Recommended For You

About the Author: Editor Elukainews