தொடர் மழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கின – அறுவடை பாதிப்பு…..!

தொடர் மழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காலபோக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லிற்கான கேள்வி குறைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செய்கையை அறுவடை செய்ய முடியாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்,

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், வயல் நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரிய தரப்பு விரைந்து செயற்பட வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவிக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews