மூன்று தினங்களுக்குள் அறுவரின் சடலங்கள் வீடுகளிலிருந்து மீட்பு –

கட்டான பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே மரணமடைந்துள்ளனர் என்று நீர்கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி குலத்திலக்க இன்று (29) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews