கொரோணா தொற்றாளர்களுக்கு நாளாந்தம் 140 தொண் ஒட்சிசன் தேவை…!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒட்சிசனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கொரோனாத் தொற்றுப் பரவுவதற்கு முன்னர் நாட்டில் நோயாளர்களுக்காக 20 தொன் ஒட்சிசன் அளவு போதுமானதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews