ஆதிவாசிகளின் தலைவரது மனைவி உள்ளிட்ட 45 பேருக்கு தொற்று..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 45 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹியங்கனை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிபடுத்தியுள்ளது.

குறித்த கிராமத்தில் ஆதிவாசிகள், சாதாரண மக்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் ஆதிவாசிகளும் சாதாரண மக்களும் உள்ளடங்குவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளான அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எனினும் ஆதிவாசிகளின் தலைவரது மனைவி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews