நாட்டில் நேற்று 4,582 பேருக்குக் கொரோனாத் தொற்று! அதேவேளை 212 மரணங்களும் பதிவு…!

நாட்டில் இன்று 4 ஆயிரத்து 582 பேர் கொரோனாத் தொற்றுடன் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557 ஆக எகிறியுள்ளது.

அதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 203 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews