யாழ்.வடமராட்சி கிழக்கு  மணற்காட்டில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காடு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மணற்காட்டில்  வீடொன்றின்  தனிமையில் வாழ்ந்த க.பன்னீர்ச்செல்வம் (வயது56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்துள்ளமை தொியவந்துள்ளது.
சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,
உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால்,  தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews