13,000 லீற்றர் மண்ணெண்ணையுடன் பயணித்த பௌசர் குடைசாய்ந்து விபத்து –

மாத்தறை-அக்குறஸ்ஸ பிரதான வீதியில் மண்ணெண்ணை பௌசர் ஒன்று இன்று (25) பகல் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 13,000 லீற்றர் மண்ணெண்ணையுடன் பயணித்த பௌசரே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மண்ணெண்ணெய் வீதியில் கசிந்ததால் அதனை சேகரிக்கும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

பௌசரின் பின்புற சில்லுகள் வெடித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews