ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகரில் வாள்வெட்டு குழ துரத்தி துரத்தி வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டு குழு மோட்டார் சைக்கிளில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவத்தில் 3 பேர் படுகாயமைடந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று மாலை குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது என்றும் அவர்கள் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்இபோதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாக்குதலுக்கான மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்டபோதும்

சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews