நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோருக்கு விளக்கமறியல்…….!

நம்பிக்கை துரோக குற்றச்சாட்டில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால்  விளக்கமறியலில் வைக்க நேற்று 15/11/2022 உத்தரவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பலாலி பொலிஸ் உத்தியோகத்தரையே எதிர்வரும்
17 ம் திகதிவரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவிட்டார்.
பலாலி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடம் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி ஐந்து லட்சம் பணம் பெற்றுள்ளார்.  அவர் எரிபொருள் நிரப்பி கொடுக்காததால் பணத்தை மீளக்கேட்டும் வழங்காத காரணத்தால் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கேசந்துறை விசேட குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் பொலிசதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews