யாழ்.கோண்டாவிலில் சுகாதார நடைமுறையை மீறி பூப்புனித நீராட்டு விழா! 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.கோண்டாவிலில் சுகாதார யாழ்.கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்துகொண்டிருந்த சுமார் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனாத் தொற்று பரவலையடுத்து ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும் வகையில்

அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல்களையும் மீறி இடம்பெற்ற மேற்படி பூப்புனித நீராட்டு விழாவில் அளவுக்கதிகமானாவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews