கண்டாவளை பிரதேச கலாச்சார உணவுத் திருவிழா….!

கண்டாவளை பிரதேச கலாச்சார உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு  கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலையில் கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு” எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.

கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் நேற்று  காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வுகளை தொடர்ந்து, உணவுத் திருவிழா ஆரம்பமானது. இதன்போது கிராமத்தில் எழிதாக கிடைக்கக்கூடிய உணவு பண்டங்களைக் கொண்டு பல்வேறு வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இலவசமாக மக்களும், மாணவர்களும் சுவைக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன், குறித்த உணவுகளை தயாரிக்கும் முறைகளும் செய்து காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பனம்பழம், மரவள்ளி, கச்சான், சத்துணவுகள், கடலுணவு என 10க்கு மேற்பட்ட உணவு பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மூலப்பொருள் விடுத்தும் 10க்கு மேற்பட்ட உணவுகள் செயல்முறையுடன் காட்சிப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

Recommended For You

About the Author: admin