தடம் புரண்டது யாழ்தேவி – வவுனியாவில் சம்பவம்

யாழ். காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு தொடரூந்து தடம் புரண்டது.

இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த தொடரூந்தின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews