வவுனியா விபத்தில் உடுப்பிட்டி இளைஞன் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு அதிகாலை 1மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பேரூந்து சாரதி, மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர். அதில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த பேரூந்தின் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவந்தவர் என்றும்  சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார் என்றும்  அவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews