கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 15 வயது மாணவன் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவன், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் நீராடச்சென்ற மாணவனே நேற்று(02) மாலை கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews