பளையில் வாள் வைத்திருந்தவர் கைது!

பளை முகாவில் கிராமத்தில் துப்பாக்கி மற்றும் வாள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews