சற்று முன்னர் இரண்டு இளைஞர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்.பருத்தித்துறையில் சம்பவம்…!

சற்றுமுன்னர் வடமராட்சி பருத்தித்துறை  உபயகதிர்காமம் பகுதியில் தோட்ட கிணற்றில் விழுந்த இரண்டு இளைஞர்கள் லரணமடைந்துள்ளதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்த நிலையில் அவ் இளைஞனை காப்பாற்ற கிணற்றில் குதித்த மற்றைய இளைஞனும் பலியாகியுள்ளதாகவும் சடலங்கள் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தில் கணேசலிங்கம் லம்போசிகன், சுசிந்திரகுமார் சசிகாந்தன் ஆகிய 24 வயதுடைய இளைஞர்களே மரணமடைந்துள்ளனர்.

அம்பவம் தொடர்பில் பருத்தித்திறை பொலீசார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews