நாட்டை முடக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா ஜனாதிபதி? இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை.. |

நாட்டில் கொவிட்19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு அரசின் மீது அழுத்தங்களும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும் நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பங்காளி கட்சிகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள்

நேற்றய தினம் நாட்டை முடக்கும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று சுகாதார பிரிவு மற்றும் மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகவும்

அதனோடு இன்றைய தினமே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் அந்த உரையில் நாடு முடக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews