முதிரை மரக்குற்றிகள் கடத்திய ஒருவர் கைது! –

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலீஸாரினால் இன்று (19) அதிகாலை 11 முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கராயன் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு
கப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள்
கடத்தப்படவுள்ளதாக பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
அக்கராயன்குளம் பொலீஸார் மேறக்கொண்ட நடவடிக்கையினையடுத்து 11
மரக்குற்றிகளும், கப் ரக வாகனமும், சந்தேக நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews