கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை – பெண்களால் ஆபத்து

கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரை பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: admin