சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கான ஆன்மீக, கல்விச் செயற்றிட்ட உதவிகள்…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை – மூதூர் / புவனேஸ்வரி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் மெல்லக்கற்கும் மாணவர்களின் விசேட கற்றல் வகுப்புக்களுக்காக ஆசிரியர் சம்பளமாக மாதாந்தம் 15000 ரூபாவும் , முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும் வழங்குவதாக தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் ஐப்பசி மாதத்திற்கான 45000 ரூபா நிதியும் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 2ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 100000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன்
ஆலயத்துக்கான பிள்ளையார் சிலை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டன.

இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் கடந்த 12/10/2022 அன்று   நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews