கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக OMP அலுவலகம் திறப்பு! –

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.அலுவலகத்திற்க்கான பெயர் பலகை எதுவும்  பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில்
பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம்
அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான OMP அலுவலகம் இயங்கி வருகிறது.
இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும்
கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ.லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு தெரியாது என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்கபட்டது என்றும்,  இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை தாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள். இதேவேளை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் OMP அலுவலகத்திற்கு எதிரராக குரல்
கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews