வடக்கில் 138 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 69 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை 610 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 13 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 11 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியாசலையில் 03 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் 20 பேருக்கு தொற்று.

மாவட்ட வைத்தியசாலையில் 13 பேர், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 14 பேர், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 17 பேருக்கு தொற்று

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews