நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அவருடைய மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று.. |

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற  உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை  அவரே தனது ருவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எனக்கும், மனைவி மற்றும் மகளுக்கும்

தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். இதன்போது 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே கடந்த சில நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அவர் கேட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews