நல்லுாரில் இருந்து திருக்கோணேஷ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை எதிர்த்து யாத்திரை!

திருக்கோணேஷ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றிரவு திருக்கோணேஷ்வரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் கூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews