சிங்களவருக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா… மரணம் சம்பவிக்க முன் கைதிகளை பிணையில் விடுங்கள். எம் கே சிவாஜிலிங்கம்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமை மோசம் அடைவதால் மரணம் சம்பவிக்க முன்னர் அவர்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என  முன்னாள் வடமாகாண சபை உரத்தினார் எம் கே சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை என் ஊடகாமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதேயா அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பிற்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களில் ஐந்து போர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய கிடைக்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படும் சிங்களவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும் மரண தண்டனை விதித்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதும் கொலை குற்றச்சாட்டுகளில் கைது செய்துபவர்களுக்கு பிடை வழங்குவதும் இடம் பெற்று வருகிறது.
தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கைதிகள் ஆகக் குறைந்தது தங்களை பிணையிலாவது விடுவிக்குமாறு கோருகிறார்கள்.
தமது உறவுகள் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்ற நிலையில் அவர்களின் உறவுகள் வீடுகளில் உறவினர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஆகையால் அவர்களின் குடும்பத்துக்கோ அல்லது சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை மோசமடைந்து மரணம்  ஏற்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான உத்தரவாதத்தை சம்பந்தப்பட்டவர்கள் வழங்க முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews