பரீட்சை வினாத்தாள் விவகாரம் விளக்கம்  கோரும் ஆளுநர் செயலகம்.

சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வாசலில் வைக்கப்பட்ட தெண்டமனாறு வெளிக்கள நிலையப் பரீட்சை வினாத்தாள் உள்ளடக்கிய பொதி தொடர்பில்  வடமாகாண ஆளுநர் செயலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு எழுத்து மூலம்  கடிதம் அனுப்பி யுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமானறு வெளிக்கள நிலையம்  வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன்  பாடசாலை தவணை பரீட்சைக்கான வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு முன்னால் வைக்கப்பட்ட சம்பவம்   பத்திரிகைகளில் வெளிவந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews