பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த 14 வயதான சிறுவன்!

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த பாடசாலை மாணவன் தவறி விழுந்து காயமடைந்துள்ளான்.

குறித்த சம்பவம் எல்பிட்டிய – பகேல பிரதான வீதியில் இன்று (14) காலை இடம்பெற்றிருக்கின்றது. 

பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் 14 வயதான சிறுவன் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews