பருத்தித்துறையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்தவரும், வாங்கியவரும் பொலிசாரால் கைது….!(வீடியோ)

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லீட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும்,  அதனை வாங்கிய நபரும், பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பகுதியில் இன்று புதன்கிழமை  பிற்பகல்  மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறுவதாக பருத்திதுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு பகுதி விசேட புலனாய் பிரிவினரினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது 380 லிட்டர் மண்ணெண்ணை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட  இருவரையும் உரிய சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ்  நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews