மோசடியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி கடத்தல்! 8 பேர் கைது.

மோசடியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற 8 டிப்பர் வாகனங்கள் சாவகச்சோி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 8 சாரதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே இந்த மோசடி தெரிய வந்தது.

அதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார், அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்த குற்றத்தில் சாரதிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews