வாய்த்தர்க்கம் முற்றியதில் மகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை..!

வாய்த்தர்க்கம் முற்றியதில் மகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் இஹலகம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் கூறினர். 

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Recommended For You

About the Author: Editor Elukainews