மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்…!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன்

சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்

குறித்த சடலம் ஆண் ஒருவரின் சடலம் எனவும் மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர்இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews