ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல்.!

கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.

ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ATM இயந்திரத்தில் பணம் பெற சென்ற நிலையில் அவரது அட்டையை உட்செலுத்தியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நிமிடங்களிலேயே ஜெனரேட்டர் இயங்கி ATM இயந்திரம் இயங்க ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அட்டை உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளது. உரிய வங்கிக்கு அழைப்பேற்படுத்தி சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் அந்த அட்டையை பெற 5 நாட்களாகும் என வங்கி அறிவித்துள்ளது.

இறுதிச் சடங்கிற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் செல்வதற்காக தொடருந்து நிலையத்திற்கு வந்திருந்த வேளையில், இவ்வாறு அட்டை சிக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியின் செயற்பாட்டினால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin