
நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டொப் வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 25, 42, 43, 49 வயதுகளையுடைய நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.