இரு குழுக்களுக்கு இடையிலான முறுகலில் ஒருவர் படுகொலை

குருணாகல் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரவத்த பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் முறுகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகொல்லாகொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin