கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கல் பணியை கைவிடும் ஜப்பான்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவி இடைநிறுத்தியதையடுத்தே, ஜப்பான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை குறித்த நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். நிதி நிலைமை நன்றாக இல்லாத நிலையில், பணிகளை இடைநிறுத்த ஜப்பான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews