வடக்கின் உயர்நிலை அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று! |

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாகாணத்தின் உயர்நிலை அதிகாரிகள் மேலும் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

இதேபோல் வடமாகாண பிரதம செயலாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்குமாகாண சமூக சேவைத் திணைக்கள ஆணையாளரும் வடக்கு மாகாண பதில் காணி ஆணையாளருமான சோதிநாதன் 

மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆயகுலன் ஆகியோருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews