யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.  

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது,

இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கரைநகரிலிருந்து யாழ் நோக்கிவந்த தனியார் பேரூந்தை முந்திச் செல்ல முற்பட்டவேளையே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை பெறறுக் கொள்ள முடியவில்லை. படுகாயமடைந்தவர்கள் யாழ் போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன் பேருந்து சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் சாரதியை பொலீசார் தேடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews