விபத்திற்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி மரணம்…!

யாழ்.கொடிகாமம் பகுதியில் விபத்துக்குள்ளான பெண் ஒருவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

நேற்று மாலை கொடிகாமம் தொடருந்து நிலையைத்தினை அண்மித்த பகுதியில் மிதி வண்டியில் பயணித்த குறித்த பெண் மீது

அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்பக்கத்தால் மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த

மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (வயது 65) என்பவர் சாவகச்சேரி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.

அவருடைய உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews