காலி முகத்திடல் பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறு காலக்கெடு! –

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள, அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவும், பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும், பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்படாத நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கோட்ட கோ கம செயற்பாட்டாளர் மகாநாம தேரர், நேற்று இரவு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews